க்ரைடான் மாகாண விமானத்தில் பிற்பகுதியில் இக்கொலை நடந்துள்ளது. 11+2= 13 பேர் பயணிக்கின்றனர். +2 என்பது விமானப் பணியாளர்கள் இருவர்.
பயணியர் அவரவரும் அவரவர் சிந்தனையில் இருக்க, விமானப் பயணத்தின் குலுக்கலால் பாதிக்கப்படும் போய்ரெட் கண்ணயர- அவருக்குப் பக்கத்தில் உள்ள ப்ரையனை எழுப்புகிறான் விமான சிப்பந்தி. உடன் போய்ரெட்டும் விழித்து கூடப் போகிறார். பயணி கிசெல்லி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் குளவி கொட்டி இறந்தாரா? ஆதிவாசிகளால் பயன்படுத்தப்படும் ஊதுகுழாய் அம்பின் விஷத்தால் கொல்லப்பட்டாரா?
எனில், கொன்றது யார்?
1. ஜேம்ஸ் ரைடர்
2. ஜீன்
3. ஆர்மன்ட்
4. க்ளென்ஸி
5. ப்ரையன்
6. போய்ரெட்
7. நார்மன் கேல்
8. ஹார்பரியின் சிசிலி
9. ஜானே க்ரே
10. வெனிட்டா கேர்
பயணிகளின் உடமைகளின் பட்டியலைக் கேட்டுப் பெறுகிறார் போய்ரெட்.
அதில் ஒரு சரியான துப்பு அப்போதைக்கு தவறான நபரைக் காட்டுவதாக அறிகிறார்.
கிஸல்லியை குளவி ஒன்று கொட்டியதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என ஆரம்பத்தில் எண்ண, கிஸல்லி விஷ அம்பெய்திக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பறக்கும் விமானத்தில் விமானத்தில் குளவி பறந்து வந்ததெப்படி.? இவ்வினா அவரது சிந்தனையைத் தட்டியெழுப்புகிறது. பிறகு, அதனடிப்படையிலாராய்கிறார் போய்ரெட். யார் குற்றவாளி.?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக